வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றவர் கைது
டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் ஒருவர் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் புறப்படும் மையத்தில் கை பையை ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் சோதனை செய்த போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தோட்டாக்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
குருநாகல், நிகடலுபொத்த, ஹிரிபிட்டியவில் வசிக்கும் 37 வயதுடைய ஓய்வுபெற்ற விமானப்படை சிப்பாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டா தமக்குச் சொந்தமானவை அல்ல என விசாரணைகளின் போது அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
