வடக்கில் இறுதிப்போர்க்களத்தில் நடந்த விடயத்தை ஆவேசமாக கூறியுள்ள கருணா
வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பழ நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளதாக கூறி உலக மக்களை முட்டாளாக்குவதாகவும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், விடுதலைப் புலிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தவருமான பழ நெடுமாறன் கூறியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அந்த தகவலை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்ததுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார் எனவும் கூறியது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பழ நெடுமாறன் கூறியது பொய் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,