மகிந்தவிற்காக தமிழ் எம்.பிக்களை கடத்திய கருணா குழு - அம்பலமாகும் உண்மைகள்
2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் 37 பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''உலக வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட வரலாறு அந்த ஆட்சியிலே நடைபெற்றது.
அந்த ஆட்சியில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற ஒரு நிலைமை இருந்ததாக அவர் கூறினார்.
இந்நிலைமையில், மகிந்தவிற்காக தமிழ் எம்.பிக்களை கருணா குழு கடத்தியதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு அவர் கூறிய முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்..,



