இலங்கையில் உறுதியான தமிழ் தேசம்: கனேடிய அமைச்சரின் கோரிக்கை
இலங்கையில் (Sri Lanka) ஈழத்தமிழ் மக்களுக்கான உறுதியான தமிழ் தேசத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என கனடாவின் (Canada) முடிக்குரியோர் - பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆவது நினைவுகூரல் நிகழ்வுக்காக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழத்தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுவதற்கான நீதிப்போராட்டத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தான் இணைந்து பயணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |