மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் பாத யாத்திரை(Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பக்த அடியார்கள் பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் ஆரம்ப கட்டமாக இன்று( 26.08.2023) காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி பெரும் திரளான பக்தர்கள் குறித்த பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கல்முனையில் அமைந்துள்ள கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்த பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மென்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் அனைவரும் காரைதீவு ,மாளிகைக்காடு ,சாய்ந்தமருது,  கல்முனைக்குடி, கல்முனை,  நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு, அன்னமலை மற்றும் தம்பலவத்தை ஊடாக மண்டூர் வரையிலான சுமார் 22 கிலோமீட்டர் தூரம் இவர்கள் பாத யாத்திரையின் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        