கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினருக்கு எதிராக மனு கையளிப்பு

Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Government
By Shan Jan 07, 2026 01:22 PM GMT
Report

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர், மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதேச சபை உறுப்பினர்களால் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு, இன்று(07.01.2026) பிரதேச சபை தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில், சபை உறுப்பினர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதோடு, அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்கப் படைகள் துரத்தும் எண்ணெய் கப்பல்! களத்தில் இறங்கிய ரஷ்யா

அமெரிக்கப் படைகள் துரத்தும் எண்ணெய் கப்பல்! களத்தில் இறங்கிய ரஷ்யா

இதன்போது, தவிசாளர் கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்துள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினருக்கு எதிராக மனு கையளிப்பு | Karaithuraipattu Pradeshiya Sabha Petition

இதனை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள்,  மனு ஒன்றினை சபை தவிசாளர், உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளித்துள்ளதுடன், ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.  

மனு கையளிப்பு

கையளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்படுவதாவது,  

மக்கள் பிரதிநிதிகளான உயரிய சபையின் உறுப்பினர்கள் ஆகிய நாம், தங்களின் மேலான கவனத்துக்கும் உரிய கௌரவ நடவடிக்கைக்கு கொண்டு வரும் விடயம் என்னவென்றால், கடந்த 31.12.2025 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் நடைபெற்றமை யாவும் தாங்கள் சபையின் தலைமை அதிகாரியாக நேரடியாக பார்த்து அவதானித்தவை என்பதை தாங்களும் உணர்வீர்கள் என நாங்களும் அறிவோம்.

சபை அமர்வுகளில் வாத பிரதிவாதங்கள் வருவது வழமையும் தேவையானதுமே. ஆனால் அதன் முடிவு வன்முறை அல்ல, மக்களுக்கு ஆரோக்கியமான சேவையாக அமைய வேண்டும். இதற்காகவே மக்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

இருந்த போதும் அன்றைய கூட்டத்தில் உறுப்பினர் சயான் அவர்கள் எம்மோடு வன்முறையாக நடந்து கொண்டார்.

அதாவது அநாகரிகமான முறையில் மேசைக்கு மேலாக பாய்ந்து கண்ணாடி குவளையை உடைத்து தாக்க முற்பட்டமை மட்டுமல்லாது சபைக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தியிருந்தார்.

இதனை தாங்கள் நேரடியாக பார்த்துக்கொண்டே இருந்தீர்களே தவிர, இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சபையை கட்டுப்படுத்துமாறும் உரிய கௌரவத்தை பேண விரைந்து கட்டளையோ நடவடிக்கையோ மேற்கொள்ளுமாறு உறுப்பினர் குணசிங்கராசாவால் கூறப்பட்டது அதற்குத் தாங்கள் அமைதி காத்ததன் காரணம் என்ன?

என்.பி.பி கட்சிக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களைக் காப்பாற்ற முயல்வது சரியானதா? இதுதான் தங்கள் ஜனநாயகமா? இவை தொடர்பாக உறுப்பினர்களுக்கு கூறிய பதிலென்ன? சபையின் மீது அதி திருப்தியிலுள்ள மக்களுக்கு பொதுவெளியில் கூறப்போகும் பதில்கள் என்ன?

இந்த நிலையில்,  20.01.2026 திகதி கூட்டம் நடத்த இருப்பதாக அறிய முடிகின்றது. நாங்கள் சபை அமர்வில் கலந்து கொள்வது என்றால் எங்களுடைய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.

மீண்டும் வன்முறை ஏற்படாது என்பதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் எவை? அல்லது மீண்டும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதா? நல்லதோ கெட்டதோ சபையை வழிநடத்துகின்ற பொறுப்பு தங்களிடம் காணப்படுவதனால் இதற்கு சரியான பதில் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினருக்கு எதிராக மனு கையளிப்பு | Karaithuraipattu Pradeshiya Sabha Petition

இதனை, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினை சேர்ந்த உறுப்பினர்களுமாக 10 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு  மனுவை சமர்ப்பித்துள்ளனர். 

பிரதி:-

01)பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு (தகவலுக்காவும் அரச சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலுக்காகவும்)

02)செயலாளர் கரைதுறைப்பற்று பிரதேச சபை ( ஆவணத்திற்காகவும் தொடர் சாட்சிக்காகவும்)

03) பொலிஸ் பொறுப்பதிகாரி முல்லைத்தீவு (சபையினதும் உறுப்பினர்களதும் பாதுகாப்பிற்குமாக)

கண்டனம் தெரிவித்த உறுப்பினர்கள்

மனுவை கையளித்த பின்னர் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  

 கரைதுறைப்பற்று பிரதேசசபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில் உறுப்பினர்  ஒருவர், சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக, அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினருக்கு எதிராக மனு கையளிப்பு | Karaithuraipattu Pradeshiya Sabha Petition

இது தொடர்பாக அன்றைய கூட்டத்திலே தவிசாளர் அவருடைய அதிகாரத்தினை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்தது. 

சபையிலே ஜனநாயகத்துக்கு முரணான முறையில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க கோரி தவிசாளருக்கு சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனுவை கையளித்துள்ளோம். 

அதன் பிரதியினை உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கும் சமர்பித்திருக்கின்றோம்.

இது தொடர்பாக தவிசாளர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியாக எமது போராட்டம் தொடரும் ” என கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

Gallery

இரு பிரபல கிரிக்கெட் வீரர்களின் ஊழலை அம்பலப்படுத்திய முஜுபுர் ரஹ்மான்

இரு பிரபல கிரிக்கெட் வீரர்களின் ஊழலை அம்பலப்படுத்திய முஜுபுர் ரஹ்மான்

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US