கடலுக்கு சென்ற காரைநகர் மீனவர்களை காணவில்லை
யாழ்ப்பாணம் - வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் மீனவர்கள் மூவர் காணாமல் போயுள்ளனர்.
காரைநகர் பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் கடந்த 7ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இன்று வரை அந்த மீனவர்கள் கரை திரும்பவில்லை என்பதால், அவர்களின் உறவினர்கள் வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.