கபில சந்திரசேனவுக்கு சரீரப்பிணை நின்ற இருவர் தொடர்பில் வெளிவந்த பயங்கர தகவல்ககள்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன பிணையில் செல்வதற்கு கையொப்பமிட்ட மூன்று சரீரப்பிணைதாரர்களில் இருவர் தொடர்பில் வெளிவந்த பயங்கர தகவல்களையடுத்தே கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சரீரப்பிணை என்பது குறித்த குற்றவாளியை நீதின்றம் வழங்கும் வழக்கு தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கூடிய சக்தி மற்றும் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா?
என்று தேடிபார்த்து நீதிமன்ற பொறுப்பில் இருந்த குற்றவாளி சரீரப்பிணையாளர் பொறுப்புக்கு வழங்கப்படுதே நீதிமன்றத்தின் படிமுறையாகும். அத்தோடு அதில் குறிப்பிடப்படும் நெருங்கிய உறவினர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்படுவதில்லை.
பிணையாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்
பிணை வழங்கப்பட்ட பின்னர் கபி சந்திரசேன வீடுக்கு போய்விட்டார்.பின்னர் நீதிமன்றத்தில் சரீரப்பிணையாளர்கள் தொடர்பில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இரு பிணையாளர்கள் சமர்ப்பித்திருந்த கிராம சேவகர் அத்தாட்சிப்பத்திரம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்த அதிகாரிகள் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நீதிமன்ற வளாகத்தை அண்மித்துள்ள வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்களான மொஹமட் ரிஷ்வான்-மொஹமட் ஹிர்சான் என்வர்களாவர்.
இவர்களிடம் இது தொடர்பில் நடத்திய விசாரணைகளில் கபில சந்திரசேன யார் என்று கேட்டுள்ளனர்.மேலும் அவரின் தொலைபேசி எண் கூட அவர்களிடம் இருக்கவில்லை.பின்னர் எவ்வாறு இவர்கள் கபில சந்திரசேனவை அடுத்த வழக்கு தவணையின் போது முன்னிலைப்படுத்துவார்கள்.

மேலும் திஸ்ஸ மற்றும் தேவா என்றவர்கள் சரீரப்பிணைக்காக கையொப்பமிட சொன்னார்கள் என தெரிவித்துள்ளனர். அத்தோடு எங்களுக்கு 15,000 ரூபா வீதம் பணம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரச்சினையையடுத்து பிணை சட்டத்திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக நீதிபதி, கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவரை கைது செய்ய சென்ற போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam