கோவிட் தடுப்பு மத்திய நிலையமாக மாறியுள்ள கந்தளாய் சீனி ஆலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சீனி ஆலை இளைஞர் படையணி நிலையம் கோவிட் தடுப்பு மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
கந்தளாய் இளைஞர் படையணி நிலையத்தினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல இன்று(9) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜி.எம்.கொஸ்தாவிடம் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது நூறுக்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்களைத் தடுத்து வைத்து சிகிச்சை
அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.