கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க நேரில் ஆய்வு

Trincomalee M A Sumanthiran Kathiravelu Shanmugam Kugathasan
By Kiyas Shafe Jan 04, 2026 12:31 PM GMT
Report

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள திருகோணமலை, கன்னியா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்தின் காணியை இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்று (04) ​இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.

வெனிசுலாவில் நிலவும் பதற்றம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - ட்ரம்பின் மற்றுமொரு அறிவிப்பு

வெனிசுலாவில் நிலவும் பதற்றம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - ட்ரம்பின் மற்றுமொரு அறிவிப்பு


தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வு பணிகள்

கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க நேரில் ஆய்வு | Kannia Pilliyar Temple Land Issue

நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் இருந்து வந்த நிலப்பகுதியை தொல்பொருள் திணைக்களம் தற்போது கையகப்படுத்தியுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, குறித்த காணி கையகப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கேட்டறிந்துள்ளார்.

காணியை மீளப்பெற்ற நடவடிக்கை

இதனை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கையாள்வது குறித்தும், நீதிமன்றத்தை நாடி குறித்த காணியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. ​

மக்களின் வழிபாட்டு உரிமையையும், வரலாற்று அடையாளங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

கோயிலுக்குள் இருந்த விகாரை

இதன்போது, ஊடகங்களுக்கு சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பில், சில வருடங்களுக்கு முன்னதாக பிரச்சினைகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த பிள்ளையார் கோயிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன், கோயில் மேடையில் பௌத்த கொடி நாட்டப்பட்டு, தொல்லியல் திணைக்களத்தினால் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என கூறப்பட்டது.

இதுபோன்று, விகாரை ஒன்றை கட்டுவதற்கான முயற்சி எடுக்கபட்ட விடயம் 2019ஆம் இடம்பெற்றது. அப்போது, நாங்கள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த நிலத்துக்கு சொந்தமான திருகோணமலையில் உள்ள இன்னொரு கோயில் உரிமையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இடைக்கால தடை ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.

இதன்போது, கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதற்காக இறுதியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான சில நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்திய போது அதில் பண்டைய விகாரை இருந்ததாக அடையாளம் காட்டப்பட்டது.

பிள்ளையார் கோயில் 150 வருடங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இருந்த வேளையில், 2000 ஆண்டுக்கு முன்னதாக விகாரை இருந்ததாகவும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. பண்டைய விகாரை அங்கு இருந்திருந்தால் அதனை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு தொல்லியல் திணைக்களத்துக்கு இருக்கிறது.

ஆனால் மீள கட்டுமானம் எதுவும் செய்ய முடியாது. ஆகவே பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் செய்யலாம் எனக் தெரிவிக்கப்பட்டது.

காணி உரிமையாளரின் முறைப்பாடு

அதேவேளையில் 150 வருடங்களாக பிள்ளையார் கோயில் அங்கு இருப்பதால் அந்த இடத்தில் இன்னொரு அளவீடு செய்யப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதில் பிள்ளையார் கோயில் மீளவும் கட்டலாம் என நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டோடு குறித்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக அந்த நடவடிக்கைக்கு முரணாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இது தொடர்பில் காணி உரிமையாளர், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பின்னர், வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக இருந்த அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பண்டைய விகாரை இருந்ததாக சொல்லப்படும் மேட்டினை பேணிப் பாதுகாப்பதற்கு மேலதிகமாக வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆகவே இந்த விடயம் சம்மந்தமாக நீதிமன்றத்தின் இணக்கப்பாட்டுக்கு மாறாக தொல்பொருள் திணைக்கள அனுமதியோடு நடைபெறுவதன் காரணமாக நீதிமன்றுக்கு இதனை தெரியப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.     

மேலதிக தகவல்- ரொஷான்

வெனிசுலாவின் திடீர் பதற்றம்! தங்கம், வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்: நிபுணர்கள் எச்சரிக்கை

வெனிசுலாவின் திடீர் பதற்றம்! தங்கம், வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்: நிபுணர்கள் எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் விமான பணிப்பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் விமான பணிப்பெண்

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US