கண்டி நகரப் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
கௌதம புத்தரின் புனித தந்த தாது காட்சிப்படுத்தமையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்ட கண்டி நகர பாடசாலைகள் நாளை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கண்டி தலதா மாளிகையில் கௌதம புத்தரின் புனித தந்த தாது காட்சிப்படுத்தப்பட்டமை காரணமாக கடந்த 24ம் திகதி தொடக்கம் கண்டியில் 61 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
கற்றல் நடவடிக்கைகள்
இந்நிலையில் குறித்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய மாகாண ஆளுனரின் உத்தரவுக்கு அமைய, மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் நாளை 24 பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
புனித தந்த தாதுவைப் பார்வையிட வருகை தந்த யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம் தொடக்கம் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri