கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் கிரிஷான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்கள்
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கட்டளையையும் மீறி பிரதான வீதியை நோக்கிச்சென்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் நுழைவாயிலில் நீர்கொழும்பிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சகோதரர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளதுடன், அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
