திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு
திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜனித் பதுகே ஆகியோர்களின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்டது.
இதனை அடுத்து கிழக்கு மாகாண உள்ளூரட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி இருவருடைய பேர்கள் முன்மொழிக்கப்பட்டுள்ளதால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
கந்தசாமி செல்வராஜா
இந்நிலையில் முதல்வர் கந்தசாமி செல்வராஜுக்கு ஆதரவாக 19 பேரும் ஜனிக் பதுகேவுக்கு ஆதரவாக ஆறு பேரும் தமது விருப்பங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து திருகோணமலை சபை முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதி முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நைனா முஹம்மது மௌசூன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.