அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சியில் முன்னிலைவகிக்க தயார்! கம்பன்பில வெளிப்படை
அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவதும், ஆளும் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்பதை வெளிப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்று ஜனாதிபதி கருதுவாராயின் அந்த சூழ்ச்சியில் முன்னிலை வகிக்க நான் தயாராகவே உள்ளேன் என
கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் கைது தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யாயின், ஜனாதிபதி தனக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கலாம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் நாடாளுமன்ற கருத்து
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்தார். ஜனாதிபதியின் உரையை தெளிவாக அவதானித்தால் அவர் கலக்கமடைந்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் சூழ்ச்சி செய்யப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகளை தோற்கடிப்பதாகவும், இருக்கும் சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கவேண்டிய தேவை எமக்கு கிடையாது.
அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவதும், ஆளும் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்பதை வெளிப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்று ஜனாதிபதி கருதுவாராயின் அந்த சூழ்ச்சியில் முன்னிலை வகிக்க நான் தயாராகவே உள்ளேன்.
அரசாங்கத்தை கவிழ்த்து தேசியத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வரலாறு மக்கள் விடுதலை முன்னணிக்கே உண்டு” என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



