இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமல்ஹாசன்
தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் ‘இலங்கைக்கு ஆதரவளிக்க’ விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரனுடனான கலந்துரையாடலின் போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் விடுத்த அழைப்பின் பேரில், கமல்ஹாசன் முதல் முறையாக சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பயணம் செய்துள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த அழைப்பு
இச்சந்திப்பின் போது, பிரதி உயர்ஸ்தானிகர், கமல்ஹாசனை நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, கமல்ஹாசன் துணை உயர் ஆணையருடன் கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
