சிக்கலான கட்டத்தை எட்டியுள்ள கஜ்ஜா கொலை விசாரணை!

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Dharu Oct 07, 2025 12:16 PM GMT
Report

அருண விதானகமகே எனப்படும் மித்தெனிய கஜ்ஜாவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட புலனாய்வுக் குழுக்கள் புதிய பாதையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

மேலும் இந்தக் குற்றம் வெறும் பாதாள உலக மோதலின் விளைவாக இல்லாமல் ஒரு சிக்கலான சதித்திட்டத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கஜ்ஜாவிற்கும் பெக்கோ சமனுக்கும் இடையிலான மோதலுக்குக் காரணம் 40 கிலோகிராம் ஹெராயின் எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதும், அதில் இருந்து கஜ்ஜா இரண்டு கிலோகிராம் திருடியதாகவும் கூறப்படுகிறது.

கஜ்ஜாவின் மகன் மீது வலுத்துள்ள கடுமையான சந்தேகங்கள்!

கஜ்ஜாவின் மகன் மீது வலுத்துள்ள கடுமையான சந்தேகங்கள்!

புலனாய்வு விசாரணை

எனினும் குறித்த கொலைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்பது புலனாய்வு விசாரணைகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் விளக்கியுள்ளன.

சிக்கலான கட்டத்தை எட்டியுள்ள கஜ்ஜா கொலை விசாரணை! | Kajja Investigation Reached A Complicated Stage

ஒரு சாதாரண ஒப்பந்தக் கொலையைப் போலல்லாமல், எந்தவொரு பணமும் நிர்ணயிக்கப்படாமல் இதுபோன்ற குற்றத்தைச் செய்ததன் பின்னணியில் சக்திவாய்ந்த தரப்பினரின் அச்சுறுத்தல் அல்லது செல்வாக்கு இருப்பதாக விசாரணைக்குழு சந்தேம் எழுப்பியுள்ளது.

இதன்படி கொலை நடந்த நேரத்தில் கஜ்ஜா தனது இரண்டு குழந்தைகளை சுமந்து சென்றதாகவும், பெக்கோ சமனால் சுட உத்தரவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்ட பிறகு, பெக்கோ சமனின் மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்படி கஜ்ஜா கொலை(18.02.2025) செய்யப்படுவதற்கு ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முன்பு, அதாவது பெப்ரவரி 11, 2024 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அரசியல் பிரமுகரான கபில திசாநாயக்கவும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அதிகாரியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் பெக்கோ சமன் பற்றி எதுவும் குறிப்பிடாமல் அரசியல் தரப்பை குறிவைத்து அவர் கூறியதால், அந்த வெளிப்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கஜ்ஜாவை நானே கொன்றேன்! விசாரணைகளில் உண்மைகளை வெளிப்படுத்திய பெக்கோ சமன்

கஜ்ஜாவை நானே கொன்றேன்! விசாரணைகளில் உண்மைகளை வெளிப்படுத்திய பெக்கோ சமன்

கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்கள்

இந்நிலையில் கொலைக்குப் பிறகு கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு அளித்த முரண்பாடான அறிக்கைகளும் விசாரணைகளில் ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

சிக்கலான கட்டத்தை எட்டியுள்ள கஜ்ஜா கொலை விசாரணை! | Kajja Investigation Reached A Complicated Stage

அவர்கள் சில தகவல்களை மறைப்பதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக, கஜ்ஜாவுக்கும் கஜ்ஜாவின் மனைவிக்கும் இடையிலான குடும்பத் தகராறுகள் தொடர்பில் முன்னதாக விளக்கப்பட்டிருந்தது.

கஜ்ஜா மற்றும் அரவது மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள் ஆகியவை கொலைக்கான நோக்கங்களை விசாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் குற்றம் தொடர்பாக, பெக்கோ சமனின் மைத்துனர் ஒரு மைக்ரோ வகை துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் பெக்கோசமனின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வலையமைப்பின் தலைவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு செல்வதில் சம்பத் மனம்பேரி ஈடுபட்டதற்கான காரணங்களும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கஜ்ஜாவின் மகனிடம் சீ.ஐ.டி விசாரணை

கஜ்ஜாவின் மகனிடம் சீ.ஐ.டி விசாரணை

அரசியல் தொடர்பு

இந்நிலையில் இதற்காக அவரது பொலிஸ் அடையாள அட்டை அல்லது அரசியல் தொடர்புகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிக்கலான கட்டத்தை எட்டியுள்ள கஜ்ஜா கொலை விசாரணை! | Kajja Investigation Reached A Complicated Stage

தென் மாகாணத்தில், குறிப்பாக மித்தெனிய மற்றும் வலஸ்முல்ல போன்ற பகுதிகளில் செயல்படும் இந்த குற்றவியல் வலையமைப்பிற்கு சில பொலிஸ் அதிகாரிகள் நேரடி ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது.

இதன்படி எதிர்காலத்தில் லஞ்சம் வாங்கியது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணைகளின் பின்னணியில், வசிம் தாஜுதீன் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக சக்திவாய்ந்த சாட்சியாக இருந்திருக்கக்கூடிய கஜ்ஜாவை மௌனமாக்குவதே இந்தக் கொலையின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்பது புலனாய்வாளர்களின் முக்கிய சந்தேகமாக மாறியுள்ளது.

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US