அநுர அரசாங்கத்தின் மீதான மக்களின் மனநிலையில் மாற்றம்
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் , கட்சியின் மக்கள் அடித்தளத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி தெரிவித்துள்ளார்.
"இன்றைய தினம், தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் குறைந்து, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கரம் வலுப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது மக்கள் விடுதலை முன்னணியயே என அவர் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் "திலீப விதாரண என்பவர் முக்கிய பங்கு வகித்தவர் எனவும், அவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது சாதாரண நிகழ்வு அல்ல" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திலீப தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் அவருடைய பதவி விலகல் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாகும்" என்று தேவ்சிரி கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், "நாட்டை வழிநடத்துவது மக்கள் விடுதலை முன்னணியா அல்லது தேசிய மக்கள் சக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும் வகையிலானது என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
