உள்ளூராட்சித் தேர்தலை உரிய முறையில் நடத்துங்கள்: ஜே.வி.பி. வலியுறுத்தல்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை உரிய முறையில் நடத்துமாறு ஜே.வி.பி. மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பதவிக்காலம்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்தும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது