ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஜே.ஆரின் பேரன்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் (J.R. Jayawardena) பேரனான பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் நோக்கில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதீப் ஜயவர்தனவுக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரவேசம்
முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த பிரதீப் ஜயவர்தன, 2017இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.

அதன்படி, இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan