இலங்கை ஜனாதிபதியை மிஸ்டர் பிறசிடன்ற் என அழைக்க முடியும்: பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிகையாளர்

Batticaloa Eastern Province
By Independent Writer Sep 01, 2023 10:23 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை என ஊடக விரிவுரையாளரும், பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை ஒரு செய்தியாளர் மிஸ்டர் பிறசிடன்ற் (Mr. President) என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியுமானால், மாகாண ஆளுநர் ஒருவரை மிஸ்டர் கவர்னர் என்று ஏன் அழைக்க முடியாது எனவும் வினவியுள்ளார். 

இது தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது.

இழைக்கப்பட்டுள்ள அநீதி

அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கொள்ள அனுமதித்திருக்கக் கூடாது. ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறமை பட்டவர்த்தனமாகிறது.

இலங்கை ஜனாதிபதியை மிஸ்டர் பிறசிடன்ற் என அழைக்க முடியும்: பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிகையாளர் | Journalist Nikson Post About Journalist Sashi

04 ஆகஸ்ட் 2023 அன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண ஆளுரை மிஸ்டர் ஆளுநர் (Mr. Governor) என்று சசி புண்ணியமூர்த்தி விளித்துக் கூறியதாலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிக் கேள்வி கேட்டமையினாலுமே, வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பிபிசி, அததெரன, ஐபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு சசி புண்ணியமூர்த்தி பல வருடங்கள் செய்தியாளராகக் கடமையாற்றி வருகிறார். அது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவரை செய்தியாளர் அல்ல என்று குறிப்பிட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டமை ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இலங்கை அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை ஒரு செய்தியாளர் மிஸ்டர் பிறசிடன்ற் (Mr. President) என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியுமானால், மாகாண ஆளுநர் ஒருவரை மிஸ்டர் கவர்னர் என்று ஏன் அழைக்க முடியாது?

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர்கள், நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் எவரையும், செய்தியாளர்கள் சேர் (Sir) என்றோ அல்லது மாண்புமிகு (Honorable) என்றோ அழைக்க வேண்டிய அவசியமே இல்லை.

சசி புன்னியமூர்த்தி கூறியது தவறு அல்ல

மாறாக அவர்களின் பதவிக்கு முன்னால் மிஸ்டர் என்று விளித்துக் கூறினால் போதும். அந்தச் செய்தியாளின் முறுக்கையும் (Proud) அது வெளிப்படுத்தும். ஆகவே மிஸ்டர் ஆளுநர் என்று சசி புன்னியமூர்த்தி விளித்துக் கூறியமை தவறானது அல்ல.

இலங்கை ஜனாதிபதியை மிஸ்டர் பிறசிடன்ற் என அழைக்க முடியும்: பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிகையாளர் | Journalist Nikson Post About Journalist Sashi

மிக எளிமையான முதுகெலும்புள்ள, முறுக்குள்ள ஊடகவியலாளர் என்றே, அவர் தன்னைப் பொது வெளியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆகவே ஊடகவியலாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருப்போர் மாத்திரமே ஊடகவியலாளர் என்ற ஒரு விதியும் இல்லை. அந்த வார்த்தை மிக மிக ஆபத்தானது.

நேர்மையான சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டையைப் பயன்படுத்த விரும்புவதில்லை. ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு இழைக்கப்பட்டமை அநீதி என்பதை ஊடக அமைப்புகள் வெளிப்படுத்த வேண்டியது கட்டாயப் பணி.

ஏனெனில் சசி புண்ணியமூர்த்திக்கு ஏற்பட்ட பாரபட்சம் ஒரு தேசியப் பிரச்சினை. ஆகவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும், ஏனைய ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US