நுவரெலியாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்களின் தங்க நகைகள் கொள்ளை
நுவரெலியா (Nuwaraeliya), திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் இருந்த 80 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் தனியே இருந்த போது, மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள், தம்மை நகரசபை ஊழியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து எட்டு இலட்சம் பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அதனையடுத்து, இரு பெண்களும் சத்தமிட கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும், அப்பகுதியில் இருந்த எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளின் ஊடாக தப்பி ஓடிய திருடர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு இலக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், திம்புள்ள - பத்தன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து, நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
