ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து ஜீவனின் அதிரடி முடிவு
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாக கூறப்படும் போதும் அவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதில் சந்தேகம் இருப்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.