பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதிய ஜீப் ரக வாகனம்
நுவரெலியா பிரதான நகரில் (லங்கா ஐ.ஓ.சி) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை ஜீப் ரக வாகனம் மோதி தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது, நாய் பலத்த காயமடைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் இறந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது.
விபத்து
அத்தோடு, பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நாயை மோதும் ஜீப் ரக வாகனம் சம்பந்தப்பட்ட காட்சி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பிரதான வீதிகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியினை கடப்பதற்கான அமைக்கப்பட்ட இடங்களில் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செயல்படவும் தவறுகின்றனர்.
இதன் காரணமாகவே பாதசாரிகள் கடவையில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri