காலிமுகத்திடல் போராட்டத்தில் குரல்கொடுத்த முக்கிய செயற்பாட்டாளரின் கணவர் கைது
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலிலும் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜீன் ஆண்டி என்ற பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜீன் ஆண்டி என்ற வயோதிப பெண்ணின் பணத்தை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பணப்பையில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபருக்கு சரீரப்பிணை
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்திருந்த நிலையில் இவர் கடுமையான மது மற்றும் சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சரீரப் பிணை நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan