தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசீலனுக்கும் இ.தொ.கா தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல்
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசீலன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கடந்த 6ஆம் திகதி கோயம்பத்தூரில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து TANTEA தோட்டங்களில் வசிக்கும் மலையக தமிழர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவு
இதற்கமைய இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு உண்டு.
அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




