வெளிநாட்டு கடன்களை மறுசீரமைத்தால் நிதியுதவிகளை செய்கிறோம் : ஜப்பானிய அமைச்சர் உறுதி
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு மூலோபாய ரீதியாக இலங்கையின் பொருளாதார மீட்சி அவசியம் என ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa)வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (04.05.2024) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடன்(Ali Sabry)சந்திப்பை நடத்திய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு தனது வெளிநாட்டுக் கடனை விரைவாக மறுசீரமைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருதரப்பு கடன் வழங்குபவர்கள்
இலங்கைக்கு கிடைத்து வந்த நிலையில் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியுதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள, இருதரப்பு கடன் வழங்குபவர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மைப் பத்திரதாரர்களுடன் கொழும்பு ஒப்பந்தங்களை செய்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், 2022 ஏப்ரலில் 46 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத இலங்கை அரசாங்கம், 2024 ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை முடிக்க எதிர்பார்த்தது.
ஆனால் இன்னும் இறுதி ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை என்று ஜப்பானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தற்போதுள்ள ஜப்பானிய யென்(Japanese Yen) கடன் திட்டங்களை மறுசீரமைத்ததன் பின்னர், விரைவாக மீண்டும் இலங்கையின் வளர்ச்சிக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
