ஜப்பானை அதிர வைத்த சம்பவம்!திடீரென மாயமான ஹெலிகாப்டர்
ஜப்பானின் தெற்கு பகுதியான மியாக்கோ தீவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது.
குறித்த ஹெலிகாப்டரில் 10 இராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிக்காக மியோக்கோ தீவருகே சென்றுள்ளனர்.
இதன்போது 10 இராணுவ வீரர்களுடன் ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு
ஹெலிகாப்டரிலிருந்து வரும் ரேடார் சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கிறது.இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல் படையின் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரிலுள்ள நான்கு தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்தும் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஜப்பான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
