ஜப்பானை அதிர வைத்த சம்பவம்!திடீரென மாயமான ஹெலிகாப்டர்
ஜப்பானின் தெற்கு பகுதியான மியாக்கோ தீவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது.
குறித்த ஹெலிகாப்டரில் 10 இராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிக்காக மியோக்கோ தீவருகே சென்றுள்ளனர்.
இதன்போது 10 இராணுவ வீரர்களுடன் ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு
ஹெலிகாப்டரிலிருந்து வரும் ரேடார் சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கிறது.இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல் படையின் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரிலுள்ள நான்கு தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்தும் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஜப்பான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
