13 வருடங்களாக ஜேவிபி எம்பிக்கள் பெற்ற பெருந்தொகை ஓய்வூதிய பணம்! வெளியான தகவல்
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கடந்த 13 வருடங்களாக ஓய்வூதியக் கொடுப்பனவாக 24 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 40 ஆயிரம் ரூபா வீதம் 62 இலட்சத்து 40,000 ரூபாவை ஓய்வூதிய கொடுப்பனவாக கடந்த 13 வருடங்களாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வூதியம்
நாடாளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் தொடர்பில் பேசுபவர்கள், தாம் பெற்றுக்கொண்ட பணத்தை மீளச் செலுத்திவிட்டு நேர்மையானவர்களாக இங்கு பேச முடியுமென்றும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு
வருகை தந்த போது, அவரது நாடாளுமன்ற அறையை சுற்றி பெரும் கூட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாசவுக்கு அது தெரியவில்லை
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
