போதைப்பொருளுடன் 4 தடவைகள் கைதான யாழ்.இளைஞன்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Drugs
Jaffna
Arrest
Court
By Kanamirtha
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞரை நீதிமன்றில் முன்னிறுத்திய போது அவரை ஒரு வருடம் புனர்வாழ்வுக்குட்படுத்த யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இந்த இளைஞன் ஏற்கனவே 3 தடவைகள் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 4ஆவது தடவையாக நேற்று முன்தினம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், ஒரு வருடம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி சிகிச்சை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US