யாழில் நிலவும் சீரற்ற காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்னல் தாக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (03.05.2023) கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
சீரற்ற காலநிலை
‘‘கடந்த சில நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 22 குடும்பங்களை சேர்ந்த 79 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் குறிப்பாக சாவகச்சேரி மருதங்கணி ஊர்காவற்துறை, கோப்பாய் பிரதேச பிரிவுகளில் பெரும்பாலான பாதிப்புகள் உணரப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.
மின்னல் தாக்கம்
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் ஒரு பாடசாலை பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு ஊர்காவற்துறை பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் காணப்பட்ட மின் உபகரணங்கள் பாதிப்பு அடைந்துள்ளன.
அத்துடன், கோப்பாய் பிரதேசத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஒரு வீட்டில் இருந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த காலநிலை ஒரு வாரமாக தொடருமென எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பாக மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் குறிப்பாக மின்னல் தாக்கங்கள் ஏற்படும் நேரங்களில் மின் உபகரணங்கள் தொலைபேசிகள் பாவனையை கட்டுப்படுத்துவது மிகவும் சால சிறந்தது‘‘ என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
