யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதை: மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத் தடை விதித்து வருகின்றது.
கடந்த ஒரு மாதகால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தடைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளோ, மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வகுப்புத் தடை

கலைப்பீட புதுமுக மாணவர் ஒருவரை பாலசிங்கம் விடுதியில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவன் ஒருவருக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விஞ்ஞானபீட புதுமுக மாணவர் ஒருவரை பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் பகிடிவதைக்கு உட்படுத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் விஞ்ஞானபீட சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை குற்றச்சாட்டில்

அத்துடன் கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்குப் புதுமுக மாணவர்களை அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கலைப்பீடத்தைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam