பகிடிவதை குற்றச்சாட்டு : யாழ்.பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று(04.12.2025) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த நீதவான்
விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் டிசம்பர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |