யாழில் கடும் பதற்றம்! பொலிஸார் துப்பாக்கிச் சூடு - இருவர் அதிரடி கைது
யாழ். வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன் காரணமாக அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் இரவு இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதன் தொடர்ச்சியாக இன்றும் மோதல்நிலை தொடர்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோதல் நிலையை கட்டுப்படுத்த முயன்ற போது ஒரு குழுவினர் பொலிஸார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமை கைமீறி சென்றதன் காரணமாக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்தவர்களை களைத்து விட்டு இருவரை கைது செய்துள்ளனர்.
எனினும், இரு குழுவினர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் ஒரு சாராரை மட்டும் பொலிஸார் எப்படி கைது செய்யலாம் எனக் கேட்டு பொதுமக்கள் முரண்பட்டுள்ளனர்.










