யாழ்ப்பாணம் - தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: வெளியான பின்னணி
யாழ்ப்பாணம்(Jaffna) - தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் பின்னணி பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை(22.05.2024) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த பகுதியில் தினமும் 20 க்கு மேற்பட்ட இளைஞர்கள் இரவில் ஒன்று கூடுவதும், அங்கு அவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டு பெரும் கூச்சலிடுவதும் தகாத வார்த்தைகள் பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர் .
இந்நிலையில், தொல்புரம் மத்திய ஆலயம் ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் மீது ஆலயம் சம்மந்தப்பட்ட முன் விரோதம் காரணமாக அவரது மகன் தொல்புரம், சனசமூக நிலைய வீதியால் சென்றுகொண்டிருந்த போது அவரின் துவிச்சக்கர வண்டியினை பறித்தும் தாக்கியுள்ளனர் .

அத்துடன், அவரது வீடு சென்று அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர் .
இந்த வழக்கு வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் மேற்குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஆதரவாக இருந்துள்ளார் .
இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி தொல்புரம் மத்திய சனசமூக நிலையத்தால் சென்றுவரும் போது முரண்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகள் பிரயோகிப்பதும் மிரட்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சம்பவத்தினத்தன்று தனது பிறந்த தினத்தினை உறவினருடன் கொண்டாடிய அந்த பொலிஸ் அதிகாரி தனது உறவினர் வீட்டிற்கு சென்று வரும் வேளையில் வழிமறித்த இளைஞர்கள் கூட்டம் முரண்பாட்டில் ஈடிபட்டுள்ளனர்.
இதன்போது, உணர்ச்சிவசப்பட்ட பொலிஸ் அதிகாரி வாள் வெட்டு தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி 8 வருடங்காளாக சேவையில் உள்ளதாகவும் எந்த ஒரு குற்றப் பின்னணியிலும் ஈடுபடாதவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவ்வாறு போதைக்கு அடிமைப்பட்ட இளைஞர்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றமையினால், இதற்கு பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam