சங்கீத போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த யாழ். மாணவனுக்கு கௌரவிப்பு
அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ். அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் ஜக்சன் பாடசாலையால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம்(24.01.2025) பாடசாலை அதிபர் குமராவேலு கண்ணதாசன் தலமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வரதகுலம் ஜக்சன் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டுள்ளார்.
நினைவு கேடயங்கள்
அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை, தலைமை உரை என்பன இடம்பெற்றதோடு பாடசாலை சமூகத்தால் ஜக்சனுக்கு நினைவு கேடயங்கள், பரிசில்கள் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார் கஜந்தன், சிறப்பு விருந்தினராக அம்பன் கிராம சேவகர் துவாரகா பிரசாந், முன்னாள் பாடசாலை அதிபர் சோ.வாகீசன், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 





                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan