யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை!
யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 சேர்ந்த மாணவனை தரம் 11ஆம் வகுப்பிற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் முற்படுத்திய நிலையில் ஆசிரியருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், மீண்டும் வழக்கு எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.
| யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவரொருவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதி |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri