யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி ஓமம் வளர்த்து வசந்த மண்டப பூசைகளுடன் நேற்று(24.09.2023) ஆரம்பமாகிய அலங்கார உற்சவம் நாகதம்பிரான் உள் வீதி சுற்றலுடன் பூசைகள் நிறைவு பெற்றுள்ளது.
திருவிழாக்கள்
இதனை தொடர்ந்து 11 தினங்கள் இடம்பெறும் திருவிழாக்களில் சிறப்பு திருவிழாக்களாக, 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி திங்கட்கிழமை சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை சமுத்திர தீர்த்தமும், நான்காம் திகதி புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri