யாழ். கல்வியங்காட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு கலைமகள் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் திருடப்பட்ட டிஸ்கவர் மோட்டார் சைக்கிள் பொது மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோட்டர் சைக்கிள் நேற்று(13) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம்(12) திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யாழில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் |
மோட்டார் சைக்கிள் மீட்பு
குறித்த இடத்திற்கு விரைந்த கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் மோட்டார்
சைக்கிளை பாரப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.