யாழ். மாம்பழ உற்பத்தி வலயத்திற்கு விவசாய அமைச்சர் விஜயம்(Photos)
யாழ்ப்பாணத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டுள்ளார்.
யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் கிராமத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை மகிந்த அமரவீர இன்று (15.10.2023) பிற்பகல் சென்று பார்வையிட்டுள்ளார்.
மாம்பழ உற்பத்தி
கடந்த 2018ஆம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மேற்படி மாம்பழ உற்பத்தி வலயமானது 500 செய்கையாளர்களை உள்ளடக்கியுள்ள நிலையில் விவசாய அமைச்சர் செய்கையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதன்போது விவசாயிகள், குரங்குகளை கட்டுப்படுத்த வாயுத் துப்பாக்கி,வீதிப் புனரமைப்பு மற்றும் மாம்பழத்தை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதனுடைய ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan