கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். குடும்பஸ்தர் கைது

Bandaranaike International Airport Jaffna Italy Tourist Visa
By Dharu Nov 01, 2023 12:19 AM GMT
Report

போலி கடவுச்சீட்டு முறைக்கேடு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றையதினம்(31.10.2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர், தனது 5 வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மனைவியின் கடவுச்சீட்டு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1.45 மணிக்கு G.9509 இலக்க ஏஆர் அரேபியா விமானத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் குடியகல்வு பரிசோதனை அதிகாரிகளிடம் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகங்கள் எழத் தொடங்கியதாகவும், ​​​​அவர்கள் மூவரும் எல்லை ஆய்வு பிரிவிடம் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். குடும்பஸ்தர் கைது | Jaffna Man Another Woman Use Wife Passport Arrest

இதன்பின்னர் அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​குழந்தை, சந்தேக நபருடையது என்றும், குறித்த பெண் தொடர்பில் உள்ள அனைத்து ஆவணங்களும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச்சீட்டை கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த கடவுச்சீட்டை வைத்து வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச்சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் 3 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கனடா மாணவர் விசாவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

கனடா மாணவர் விசாவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் மற்றொரு நாடு

இலங்கையை தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா சலுகை வழங்கும் மற்றொரு நாடு

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US