யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை
யாழ்ப்பாணம் (Jaffna) கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று (16.01.2025) மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
சிஐடி பொலிஸ்...
சம்பவத்தின் போது, குற்ற புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அக்குழுவினர் கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
மேலும், கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri