யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான (JICS) நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக மைதானத்தில் கட்டுமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நிர்மாணப் பணிகள்
இது, 2026 ஜனவரி 14, அன்று நடைபெறவிருந்த முதல் சோதனை ஆட்டம் உட்பட திட்டமிடப்பட்ட பணித் திட்டத்தை சீர்குலைந்தது.இப்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் வரவிருக்கும், 2026, ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் முடிந்த பிறகு சோதனை ஆட்டம் நடத்தப்படும்.
இந்த நிலையில் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் 48 ஏக்கரில் உருவாக்கப்படும், இதில் 10 மைய விக்கெட்டுகள் உள்ளன, எல்லை தூரம் 80 மீட்டர் வரை நீடிக்கப்படவுள்ளது.