யாழ்.வைத்தியசாலையில் நடந்த மனித வேட்டைகள்! உயிர் பிழைத்த வைத்தியரின் உடல்நடுங்க வைக்கும் சாட்சி
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் யாழ் வைத்தியசாலையில் நடந்த மனித வேட்டைகள் பற்றி உயிர் பிழைத்த வைத்தியஅதிகாரியொருவர் உடல்நடுங்க வைக்கும் சாட்சியை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
யாழ் வைத்தியசாலையில் தங்கியிருந்த வைத்தியர்கள் தாதியர்கள், நோயாளர்கள் என்ற வேறுபாடுன்றி அனைவரையும் இந்திய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
பிணக்குவியல்கள் மத்தியில் அசையாது கிடந்து உயிர்தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைகளை தூக்கியப்படி நாங்கள் ஒன்றுமே அறியாத தாதியர்களும் வைத்தியர்களும் நாங்கள் சரணடைகின்றோம் என்று கூறியப்படி சிலர் அவர்களிடம் கூறியுள்ளனர்.
வைத்தியர் சிவபாதசுந்தரம் இந்தியபடையினரிடம் வரும்வரை நோக்கிவரும்வரை காத்திருந்த படையினர் அருகில் வந்ததும் அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அவலங்களின் அத்தியாங்கள் நிகழ்ச்சி..



