ஊரடங்கு நேரத்தில் யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவம்
யாழ். மாவட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற கடும் மோதலில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், யாழ். மாவட்டபுரம் பகுதியில் இருவருக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை மாவட்டபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர்களுள் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை.