யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - திருமணத்தை அடுத்து ஏற்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18 பவுண் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டின் பின்னால் நுழைந்த திருடர்கள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் சமையலறை யன்னல் ஊடாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri