யாழ். நுழைவாயிலில் சிவபெருமான் சிலை பிரதிஷ்டை (Photos)
செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (07.12.2022) காலை 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும். அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.