தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிப பெண் ஒருவரது சடலமானது தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்
வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.

நேற்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை தீயில் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்துள்ளது.

வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam