உங்களிடம் ஆளுமை இல்லையா..! அமைச்சரைப் பார்த்து வலி வடக்கு இளைஞன் கேள்வி
வலி வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எனது கேள்விகளுக்கு பதில் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டி வரும் என வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ். அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை பார்த்து கேள்வி எழுப்பினார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருடங்களுக்கு மேலாக எமது பகுதியை இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. எமது பகுதியை விடுவிப்போம் என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த நீங்கள் எப்போது விடுவிப்பீர்கள் என கூற வேண்டும்.
அபிவிருத்திக் குழுக் கூட்டம்
அவ்வாறு உங்களால் கூற முடியாவிட்டால் உங்களிடம் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டாம் மக்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்கள் வரி பணத்தில் இடம்பெரும் அபிவிருத்தி குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும். ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் என வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகிறது அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்காக ஊடகங்களின் உதவி தேவை.
மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன கதைக்கிறார்கள் என்பது தொடர்பில் அந்த மக்கள் அறிவது அவர்களின் உரிமை அதை ஊடகங்கள் அவர்களுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும்.

அதை விடுத்து ஊடகங்களை காணொளி எடுப்பதற்கு கட்டுப்படுத்தம் செயற்பாடு மோசமான ஒரு அடக்கு முறையின் செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பயனுள்ளதா என பலருக்கும் கேள்விகள் எழுகின்றது என்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி குழு கூட்டங்களில் பொதுமக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு உரிய முறையில் அபிவிருத்தி குழு தலைவர் பதிலளிப்பது இல்லை.
வலி வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்குவதற்கு அவரால் இயலாமல் இருக்கிறது எப்படி மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri