லலித் குகன் வழக்கில் கோட்டாபயவிற்கு யாழ் நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நிகழ்நிலையில் தோன்றி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்னர் (2011 இல்) லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நீதிமன்றம் அனுமதி
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த இரு ஆர்வலர்களும் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் நடந்த காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவுக்கு, இந்த விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த 2019 செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
முன்னதாக, தான் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார். எனினும், பின்னர் சில "பாதுகாப்பு காரணங்களைக்" குறிப்பிட்டு, நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்க அவர் அனுமதி கோரியிருந்தார்.
வழக்கு விசாரணை
எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அவர் நேரில் முன்னிலையாக மறுத்தமையைத் தொடர்ந்து, குறித்த அச்சுறுத்தல்கள் பற்றிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.

அதன்படி, இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்ச இணையவழியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகித் தமது சாட்சியத்தைப் பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியின் மூலம், நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்த முக்கிய காணாமல் ஆக்கல் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri