யாழ். பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவில் சர்ச்சை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ். பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம்(11.03.2024) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பெரிய பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கொட்டகையாக அமைக்கப்பட்டு அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள்.
பள்ளியின் தலைவர் தெரிவு
1990 ஆம் ஆண்டு வெளியற்றப்பட்டு மீண்டும் 2002இல் மீண்டும் மீள்குடியேறி வந்து பார்த்தபோது பள்ளிவாசலை உடைந்த நிலைமையிலை் கண்டோம்.
பின்னர் அதனை பெரிய கஷ்டத்தின் மத்தியில் ஒவ்வொரு தனவந்தர்களிடமும் பண உதவி பெற்று பள்ளிவாசலை நாங்கள் புனரமைத்து இன்று அல்லாவினுடைய கிருபையினால் ஒரு வழிபாட்டு தளமாக இருந்து கொண்டிருக்கிறது.
எனவே எங்கே பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பள்ளியின் தலைவராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
எமது மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேளி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி
இந்த தெரிவுகளை நடத்துபவர்களும் சரி முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் இருப்பவர்களும் சரி யோசிக்க வேண்டும்.
அவர்களுடைய ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாக தெரிவு நடந்தால் ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தலைவராக நியமிப்பார்களா? ஏன் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் இந்த நிலைமை?
அல்லாஹ்வுக்காக இந்த நிர்வாக தெரிவை உடனடியாக நிறுத்தி புனித ரமலான் நாளை ஆரம்பமாக உள்ளதால் ரமலான் முடிந்த பிறகு முஸ்லிம் கலாசார திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த தெரிவை நடத்தி எதிர்காலத்தில் யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி செய்வீர்களா என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |